உப்பிலிபாளையத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.


கோவை: உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை உப்பிலிபாளையம் மற்றும் சௌரிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழு மற்றும் சௌரிபாளையம் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர், செயலாளர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

சிங்காநல்லூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 960 வீடுகள் மற்றும் சௌரிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள 528 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக குடியிருப்போர் நசை சங்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.



மேலும் மறுகட்டுமானம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இக்குடியிருப்பு சங்கங்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் இதுகுறித்து குடியிருப்போர்களிடம் தெரிவித்து சங்கம் இசைவு தெரிவித்தவுடன், மறுகட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...