கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் குளக்கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணியின் வெற்றியைத் தொடர்ந்து இன்று மூன்றாவது கட்டமாக 2ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் பெரியகுளத்தில், மூன்றாவது கட்டமாக 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.



கோவை பேரூர் பெரியகுளத்தில் ஆறாண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் வார களப்பணி, அக்குளத்தைத் தூர்வாரி பின்பு செங்குளம் வெள்ளலூர் குளம் தூர்வாருதல், 10 குட்டைகளைத் தூர்வாரி நீர் கொண்டுவந்து சேர்க்கும் பணி, மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், வாய்க்காலைத் தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், அணைக்கட்டுகளில் களப்பணி செய்தல், கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போன்ற நீர் நிலைகளுக்கான தன்னார்வப் பணி தற்போது 278 வாரங்களை எட்டியுள்ளது.



நமது நகரின் பசுமை பரப்பளவை அதிகரிப்பது தற்போதைய காலத்தில் அவசியமாக இருக்கிறது.



அதனைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளின் கரைகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் மாயாவாக்கி முறையில் அடர் வனங்களை உருவாக்கி வருகிறோம்.



நகரின் பிரதானமான நீர் நிலையாக உள்ள பேரூர் பெரிய குளத்தின் கரையில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 3,500 மரங்களைக் கொண்ட குறுங்காட்டை உருவாக்கியுள்ளோம்.



தற்போது மூன்றாவது கட்டமாக 2000 மரக்கன்றுகளை நடும் பணி இன்று (ஞாயிறு) காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்த பணிக்காக நிதி உதவி ZF Windpower, Coimbatore pvt Ltd நிறுவனம் வழங்கியுள்ளது.



இந்த நிகழ்வில் திரளான பொதுமக்களும், தன்னார்வலர்களும், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

















Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....