கோவையில் ஆடி அறிமுகப்படுத்தும் டீசல் கார் ஆல்நியு ஆடிஏ4, ஆடி ஏ4 35டிடிஐ

ஜெர்மன் சொகு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மாபெரும் வெற்றிகண்ட ஏ4 ஆடியை தொடர்ந்து தற்போது புதிய டீசல் வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய ஆடி வகை காரின் அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில், ஆடி இன்டியா தலைவர் ராகில் அன்சாரி பேசுகையில், வெற்றிகரமாக விற்பனையாகும் சிறந்த மாடலை உருவாக்குவது எளிதான வேலை அல்ல. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையும் மிகவும் பரவசமானது. ஆடிஏ4 35டிடிஐ மேலும் ஒரு உயர்நிலையை எட்டியுள்ளது. ஈடு இணையற்ற தொழில்நுட்பம், முந்தைய ஏ4 ஆடியை காட்டிலும், மறு வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தீவிர வரவேற்பை பெற்றுள்ளது.

செயல் திறன், ஓட்டுதற்கு உற்சாகம், உயர்தொழில்நுட்ப தகவல் பொழுதுபோக்கு அம்சம் போன்றவை இந்த பிரிவில் மேலும் ஒரு உயர்வை அளிக்கிறது.

இந்த புதிய வகை ஆடி காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின், மேம்படுத்தப்பட்ட எரிதிறன் செயல்பாட்டு முறையால் எரிபொருள் சிக்கனத்தில் புதிய நிர்ணயம் கிடைத்துள்ளது.



மறுவடிவமைக்கப்பட்ட 7 ஸ்பீட் எஸ்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன், இன்போடைன்மென்ட் மேம்படுத்தப்பட்ட செயல் திறன் , அதிகபட்ச சக்தி தரும் 190 எச்பி இன்ஜினாக மாற்றியுள்ளது" என்றார்.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் அதிகபட்ச திறனாக 1ஜிஎச்பி, பலவகை உலோக கலவையால் முந்தைய வாகனங்களை விட 120 கிலோ இலகு எடை, எரிபொருளை சிக்கனப்படுத்த எஸ்-ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுக்கான 7 நிலை வேக கட்டுப்பாடு, சக்தியிலும் எரிபொருள் சிக்கனத்திலும் 7 சதவிகிதம் அதிகரிப்பு, விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ், புதிய எம்எம்ஐ டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.

இதன் கோவை மாவட்டத்தில் எக்ஸ் ஷோரும் விலையாக ரூ.41 லட்சத்து 16 ஆயிரம் நிர்னயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...