கோவை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி! - பரபரப்பு

ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாக ஒரு பெண் உட்பட 3 ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் மனுக்களை அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் வரும்போது, அலுவலகம் முன்பு ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.



அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி, அந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அவர்கள் துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆன்ந்த்குமார், ரகு, அகமது, என்பதும் அப்பெண் ரகுவின் தாயார் லட்சுமி என்பதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து பேசிய அவர்களது குடும்பத்தினர், பல ஆண்டுகளாக அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ளவர்கள் இவர்களை ஆட்டோ ஓட்டக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தனர்.

அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பாஜக கட்சியை சேர்ந்தது எனவும், இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களையும் பாஜகவில் இணையும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டினர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அதன்மூலம் ஆர்டிஓ அங்கு விசாரணை செய்தனர்.



இதையடுத்து அதிகப்படியான மிரட்டல்கள் வருவதாக தெரிவித்தனர். வாகன கடன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...