ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப்பட இயக்குநருக்கு அவரது ஆசிரியர் வாழ்த்து!

கோவை ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரியில் படித்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில், அவரது ஆசிரியை ராதா வாழ்த்துக்களை கூறியதுடன் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸுக்கு அவரது ஆசிரியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரை உலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர் தான். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, உலக திரை நட்சத்திர பட்டாளங்களுடன் வெகுவிமரிசையாக அரங்கேறியது.

இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.

இதேபோல், முதுமலையை சேர்ந்த யானை பாகன் தம்பதியை மையமாக கொண்ட, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவண படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயைப் பிரிந்த குட்டியானைகளை காப்பாற்றிய முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவண குறும்படமான தி எலிபென்ட் விஸ்பர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் மகுடம் சூட்டப்பட்டது

இந்திய - அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பாராட்டு மழையில் நனைந்து வரும் ஆவணப்பட இயக்குநர் கார்த்திகிக்கு, அவரது கல்லூரி ஆசிரியை நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரியில் 2004-2007 ஆம் ஆண்டில் ஆஸ்கர் நாயகி, கார்த்திகி இளங்கலை விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கின்றார். படிக்கும்போதே சிறந்த மாணவியாக திகழ்ந்த கார்த்திகி கடுமையான உழைப்பாளி.

இவர் 6 வருடமாக தெளிவான திட்டமிடலின் மூலமாக இந்த ஆவணப்படத்தை திறம்பட இயக்கினார். இவரின் இந்த இடைவிடாத முயற்சிக்கு ஆஸ்கர் தந்த மகுடத்தை பார்த்து பெருமை கொள்வதாக தெரிவித்திருக்கின்ற, அவரின் கல்லூரி ஆசிரியை ராதா ஆஸ்கர் நாயகி ஆவணப்பட இயக்குநர் கார்த்திகிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...