கோவையில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்!

கோவை செட்டிப்பாளையம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நீலகிரியை சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் மீது, பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாக செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் திருத்துவநாதன். இவரது மகன் சார்லஸ் (34), கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்டதாக செட்டிபாளையம் காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கீற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சார்லஸ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சார்லஸ் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான சார்லஸ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் கோவையில் 13 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...