உடுமலையில் தீப்பிடித்து எரிந்த லாரி - போலீசார் தீவிர விசாரணை!

உடுமலை அருகே கல்லாபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணிகண்டன் என்பவரின் லாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் வேல்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் தனக்குச் சொந்தமான லாரியில் அவரே டிரைவராக இருந்து ஓட்டியும் வந்தார்.

இந்த நிலையில் கல்லாபுரத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு உடுமலை வெஞ்சமடை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு மக்காச்சோள மூட்டைகளை இறக்கி விட்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கல்லாபுரம் சென்று விட்டார்.



இந்தநிலையில் அதிகாலை லாரியில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் லாரி முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடுபோல மாறியது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பேட்டரி பவர் ஒயரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக லாரியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...