கோவையில் இருந்து ஆளுநருக்கு சாம்பல் அனுப்ப முயன்ற த.பெ.தி.க.,வினர் கைது!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு, இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் சாம்பலை கோவையில் இருந்து அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையொப்பம் இடாமல் இருந்து வரும் நிலையில் ஆளுநருக்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆளுநருக்கு இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களை நினைவுப்படுத்துகின்ற வகையில் சாம்பல் அனுப்பும் நூதன போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சாம்பலை அனுப்புவதற்காக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். அப்போது, ஆளுநருக்கு எதிரான கண்டன பதாகைகள், ஆளுநர் புகைப்படம் பொறித்த மாதிரி ரம்மி சீட்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.



பின்னர் அந்த மாதிரி ரம்மி சீட்டுகளை கிழித்தெரிந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அப்போது செய்தியாளர்களிடம் கு.இராமகிருட்டிணன் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற பல்வேறு மக்கள் நலன் மசோதாக்களை நிறைவேற்றாமல் தமிழக ஆளுநர் புறக்கணித்து தாமதப்படுத்தி வருவகிறார். இறுதியில் தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இல்லை என கூறி வருகிறார்.அப்படிப்பட்ட ஒரு மசோதாவான ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்கின்ற மசோதாவை நிறைவேற்றாமல் ஆறு மாத காலம் கிடப்பில் போட்டுவிட்டு இறுதியாக தமிழ்நாடு அரசிற்கு அதற்கு அதிகாரம் இல்லை என்ற கருத்தை ஆளுநர் பதிவு செய்துள்ளார்.

ஆளுநருக்கு தான் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு மனமில்லை. ஆன்லைன் ரம்மி நிறுவனத்தினரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தமிழகத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை ஆளுநருக்கு உணர்த்துகின்ற வகையிலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியார் திராவிட கழகம் ஆளுநருக்கு சாம்பல் அனுப்புகின்ற போராட்டத்தை நடத்துகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...