பல்லடம் அரசுக்கலை கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்றம் தொடக்கம்

போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள் தடுப்பு மன்றம் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, சமூக ஆர்வலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருள் தடுப்பு மன்றத்தினை காவல் ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே காவல் ஆய்வாளர் பர்வீன் பானு பேசுகையில், அனைத்து குற்றச் சம்பங்களுக்கும் முதல் காரணமாக அமைவது போதைப் பொருட்கள் தான், வலிமையான இளைய தலைமுறையை உருவாக்க போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் தள்ளி இருக்க வேண்டும், கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.



இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...