பெருந்துறையில் அதிக வட்டி தருவதாக மோசடி - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த 4 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்ததாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எம்.எஸ்.குரு, அமுதன், பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 பேரும் குற்றவாளிகள் என்றும், தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...