உடுமலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், தளி, மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கரமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில்நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்வினீத் முன்னிலை வகித்தார்.



அனைத்துத்துறை அலுவலர்களும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில், வளர்ச்சித்திட்ட பணி களை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.



பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியினைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...