திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள, புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2கோடி நிதியுதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ.90கோடியில் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ கருவிகளுடன் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் விழா இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ECGC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேல் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் முருகேசன் வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிநவீன கருவிகளுடன் திருப்பூரில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறித்து இப்போது சொன்னால் பட்ஜெட் ரகசியம் வெளியாகிவிடும் எனவே நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...