தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் பரவும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண மண்டபம் அருகில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும், இதே நிலை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: தாராபும், சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண்டபம் உள்ளது. இதன் அருகில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று தாராபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.



இதையும் மீறி அப்பகுதி பொதுமக்கள் அதை அலட்சியப்படுத்தும் நோக்கில் அங்கு தினசரி குப்பைகளை கொட்டி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பலமுறை அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியும் அது சிலர் கண்டு கொள்ளாமல் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் காய்ச்சல் நோய் தொற்றுப் போன்ற பல இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.



நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வைத்துள்ள கேமராவில் பதிவாகியுள்ள குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து மேற்கொண்டு குப்பையில் கொட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....