குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன்..! - கோவையில் நடிகை கவுதமி பேட்டி

தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று அரசு அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை கவுதமி, மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன். அரசாங்கமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும், என்றார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் நடிகை கௌதமி பங்கேற்றார்.



கோவை குனியமுத்தூரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் நடிகை கௌதமி பங்கேற்று இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ஜி 20 மாநாடு நமது இந்தியாவில் நடப்பது நமது தேசத்திற்கே ஒரு கெளரவம். இந்த கௌரவமும், அங்கீகாரமும் தற்போது கோவைக்கு கிடைத்துள்ளது. நம் தேசத்தின் இளைஞர்களுடைய எதிர்காலம் தேசத்திற்கு மட்டுமல்லாமல், உலக வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது, தேவையானது என எடுத்துக்காட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக ஆளுநர் பேசியுள்ளார்கள்.

ஜி 20-யில் இனி அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும். அனைவருக்கும் தேவையான நிகழ்வாகவும் அமையும். ஜி 20-யில் இருந்து நம்மால் என்ன எடுத்துக் கொள்ள இயலும் என்பதை நாம் பார்க்க வேண்டும். சுயநலம் என்பது நமது நல்லதிற்காக, நாம் தலை நிமிர்ந்து இன்னும் கௌரவமாக பெருமையாக வாழ்வதற்கு என்ன சாதிக்கலாம் என்பதை இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜிஸ்டி என்பது உலக அளவில் எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் மீண்டும் அரசியல் பேச்சை கொண்டு வரக்கூடாது, அதுதான் தேசத்திற்கு மிகவும் நல்லது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என தற்போது தெரிவித்துள்ளது குறித்து கேள்வி பதில் அளித்த அவர், மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அதை நான் வரவேற்பேன் எனவும், அரசாங்கமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் அதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.

கேஸ் விலை உயர்வு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், இது ஒரு வார்த்தையில் கூறுகின்ற பதில் அல்ல எனவும், உலக அளவில் நடைபெறுகின்ற, பல்வேறு விஷயங்கள் சேர்ந்து தான் இது போன்ற மாற்றங்கள் வருகிறது என்றார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...