பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கல்!

பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு நவீன செம்மொழி பூங்கா மற்றும் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ஆகிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பீளமேடு அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


கோவை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை மற்றும் கோவையில் நவீன செம்மொழி பூங்கா, மெட்ரோ ஆகிய அறிவிப்புகளை வரவேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், கோவையில் நவீன செம்மொழி பூங்கா, கோவைக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களை இன்று பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் வழிகாட்டுதலின் படி பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் சிக்னல் அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட கழக செயலாளர்கள் சபரி தன்ராஜ், ஆ. மாடசாமி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பகுதி கழக நிர்வாகிகள் பூவை துரைசாமி, பந்தல் ரவி, ஜெயராஜ், லக்ஷ்மி

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. தனபால், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா. மணிகண்டன், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...