கோவையில் உலக வனநாள் விழிப்புணர்வு பேரணி

உலக வன தினத்தையொட்டி கோவை அரசுக் கல்லூரயில் வனத்துறை சார்பில் Protect Forest for Better Future எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



கோவை: உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து "Protect Forest for Better Future" என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும், வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்தப் பேரணியை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக் குமார் உட்பட வனத்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக கல்லூரி மைதானத்தில் உலக வன நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...