கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), சனீப் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...