இன்று உலக தாய்மொழி தினம், தாய் மொழியை கொண்டாடுவோம்!

உலகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் தாய் மொழியை கொண்டாடுவதற்காக கடந்த 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கபட்ட முடிவின் தீர்ப்பே உலக தாய்மொழி தினம். தொடர்ந்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் பிப்ரவர் மாதம் 21-ம் நாள் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கால மாற்றத்தால் உலக மக்கள் தங்கள் தாய்மொழியை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், தாய் மொழி கல்வியை வலியுறுத்தும் விதமாகவும் இவ்விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அன்றைய பாகிஸ்தான் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட மொழியாக வங்கமொழி இருந்தது. உருது மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறிந்த அளவிலேயே இருந்தனர். இருந்த போதிலும், கடந்த 1949-ம் ஆண்டு அந்நாட்டு அரசு உருது மொழியை அலுவல் மொழியாக அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு வங்கமொழி பேசுபவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நாடெங்கிலும் பல போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் விளைவாக பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய்மொழிக்காக போராடி வீழ்ந்த அந்த இளைஞர்களை நினைவு கூறும் வகையிலும் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்படுவது சிறப்பு. 

இந்த கோர சம்பவத்தின் விளைவாக வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. தாய் மொழி என்பது தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல. அது, ஒரு தேசத்தையே இரண்டாக பிரிக்கும் அளவிற்கு  வல்லமை பெற்றிருக்கிறது என்பது இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிய முடிகிறது. 

ஒரு தேசம் அளவில் சிறியதாக இருந்தாலும், தாய் மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களிடையே மொழிப்பற்று இருக்க வேண்டும். அப்போது, தான் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மட்டும் வாழ்கை நெறிகளை காப்பாற்ற முடியும். ஏனெனில், இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அன்னையே தாய்மொழி. 'ஒரு மொழி அழியும் போது, அங்கு ஒரு இனமே அழிகிறது' என்ற கூற்று இதற்கு சான்று. 

இன்றைய சூழலில் தாய் மொழி கல்வி முறை என்பது கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புக்காக இணைப்பு மொழியான ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கள் தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் தெரியாத ஒரு சந்ததியினரை நாம் உருவாக்கி வருகிறோம். 

உலகில் மிக அதிக அளவில் இலக்கிய நோபல் பரிசுக்களை வென்றவர்கள் பிரான்ஸ் தேசத்தினர்.  அவர்கள் தங்கள் தாய் மொழியான பிரஞ்சு மொழி பேசுவதை பெருமையாக கருதினர். ஒரு போதும் ஆங்கில மொழி தங்கள் தாய்மொழிக்குள் ஊடுறுவக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். இதற்காக தனிச்சட்டம் இயற்றிய கதையும் பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் கிளர்ச்சி எழுந்த மாநிலம் தமிழ்நாடு. நடுவணரசின் இந்தி திணிப்பு முறைக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் போராடினர். அப்போது பலர் படுகொலை செய்யப்படனர். தாய் மொழியை காக்க போராடிய நம் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சனவரி மாதம் 25-ம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மொழிக்காக போராடி உயிர் நீத்தவர்களின் பிள்ளைகளாகிய நாமே, நம் குழந்தகளுக்கு தாய்மொழியை கற்று தர மறந்ததும், தாய்மொழியினை புறக்கணிப்பதும் வேதனை.! 

 

மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவதற்கு மட்டுமன்றி மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலையும், நன்னடத்தையையும் மற்றும் பன்பாட்டையும் வளர்க்கும் அன்னை என்று குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதோடு நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

தாய் மொழியை கொண்டாடுவோம்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...