கோவை அருகே தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு

கோவை போத்தனூர் பகுதியில் சலீம் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக்குகளைத் தரம் பிரிக்கும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் போத்தனூர் அடுத்த மேட்டூர் சாய்பாபா கோயில் அருகே உள்ள காலி இடத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் காப்பர் கம்பிகளை தனியாக பிரிக்கும் குடோன் வைத்துள்ளார்.



நேற்று இரவு குடோனில் ஒயரில் உள்ள காப்பர் கம்பிகளை தனியாக பிரித்து எடுக்க தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அந்த தீ அருகே உள்ள பிளாஸ்டிக் பொருட்களிலும், மரப்பொருட்களிலும் பரவி குடோன் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது.



இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து ஏற்படும்போது உள்ளே யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...