பொள்ளாச்சி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகார் - தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நாலாமூல சுங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வேங்கடபதி பெருமாள்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள நாலமூல சுங்கம் பகுதியில் விஸ்வகர்மா சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வரும் வேங்கடபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் வழித்தடத்தையும் கோயில் அருகே உள்ள பாலாற்றங்கரை நீர் வழி தடத்தை தனியார் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிகரமித்து வழித்தடத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் தோட்டத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



மேலும், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...