ஹோலி முடிந்து திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் - காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூருக்கு திரும்பிவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான சில வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகை என்பதால் மீதம் இருந்த வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக சென்றிருந்தனர்.



இந்நிலையில், பண்டிகை முடிந்து தற்போது வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வடமாநில தொழிலாளர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...