தாராபுரம் அருகே மூலனூரில் பருத்தி ஏலம் - ரூ.1.20 கோடிக்கு பருத்தி விற்பனை

தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலகத்தில் ரூ.1,20 கோடிக்கு பருத்தி விற்பனையானது. வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8099ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6100-ம், சராசரி விலையாக ரூ.7150ம் நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 619 விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.

இவற்றை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8099ம், குறைந்தபட்ச விலையாக ரூ.6100-ம், சராசரி விலையாக ரூ.7150ம் நிர்ணயிக்கப்பட்டது.



அதன்படி 5473 மூட்டை பருத்தி(குவிண்டால் 1701.44) ரூபாய் 1,20,91,276/-க்கு 22 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...