கோவையில் 6 குட்டைகள் மாயம்..! - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கிய கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 6 குட்டைகள் மாயமானதாகவும், அதை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவையில் 6 குட்டைகள் மாயமானதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.



கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.



தொடர்ந்து மனுக்களும் கொடுத்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வரத்து கால்வாய்கள், நீர் வழிப்பாதைகளில் உள்ள முட்புதர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். கோடை மழை ஜூன் மாதம் முதல் தொடங்கும் முன்பு அனைத்து நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்பட வேண்டும். இதனை உள்ளாட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உக்கடம் முதல் சின்ன வானொலி நிலையம் வரை 1985-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ராமன் முயற்சியில் 7 இடங்களில் உருவாக்கப்பட்ட 90 ஏக்கர் குட்டைகளில் 6 குட்டைகள் காணாமல் போய் விட்டது.

எஞ்சி உள்ளது ஒரே ஒரு குட்டை தான். எனவே மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கண்ட 6 இடங்களில் உள்ள 90 ஏக்கர் குட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு தலைவர் கூறுகையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாதிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதனைப் பாதுகாக்க உலர் கலன்கள் இல்லை. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். சாதிக்காய்கள் அதிக அளவு வீணாகப் போய்விடுகிறது. எனவே பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உலர் கலன்களை அமைத்து தர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அன்னூர் விவசாயிகள் சங்கம் ரங்கசாமி கூறுகையில், அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் செய்ய வேண்டும், என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...