உடுமலை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி சாலையில் ஊர்காவல்படை அலுவலகம் இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும், இந்த அலுவலகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.


திருப்பூர்: உடுமலை நகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்த ஊர்காவல்படை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. இரு தாலுகாவிலும், 60-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை உள்ள நிலையில், அவர்களுக்கான அலுவலகம், 20 ஆண்டுக்கும் மேலாக, நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு, மாதம்தோறும் ஊர்க்காவல் படையினருக்கு எஸ் பி அலுவலகத்திலிருந்து வாடகை தொகை மற்றும் செலவினங்களும் வழங்கப்படும். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வாடகைத் தொகை 6 ஆண்டாக வாடகை மற்றும் அலுவலக செலவினங்கள் நிதி ஒதுக்கபடாததால் வாடகை நிலுவை வைக்கப்பட்டது.



இதனால், நகராட்சி அதிகாரிகள் அலுவலகத்தை மூடி, 'சீல்' வைத்தனர். இதனால், ஊர்க்காவல் படை வீரர்கள் குறித்த ஆவணங்கள், உதவித்தொகைக்கான பில், ரசீதுகள் அனைத்தும் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட நிலையில், மாதம் தோறும் ஊர்காவல் படையினருக்கு உதவித் தொகைக்கான பில் கூட எழுத முடியாமல், தவித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கான வாடகை, செலவினங்கள் ஒதுக்கீடு செய்யவும், ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர்களுக்குரிய மாத உதவிதொகை மற்றும் பணியாற்றிய காலத்திற்கான சிறப்பு தொகை வழங்க, எஸ்.பி., மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவல்படை வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...