கோவையில் கூலிப்படையை ஏவி இளைஞரைக் கொன்ற நண்பன் - அடமானம் வைத்த காரை திருப்பாததால் வெறிச்செயல்

கோவையில் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி திருப்பி தராத ஆத்திரத்தில், சோமையம்பாளையத்தை சேர்ந்த அஷ்வின், கூவிப்படையை மூலம் நண்பர் சிரஞ்சீவியை தாக்கியுள்ளார். சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி, உயிரிழந்த நிலையில், அஷ்வின் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது23).



இவர் தனது நண்பரான அஷ்வின் என்பவரிடம் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி இருந்தார். ஆனால், சிரஞ்சீவி பணத்தை திருப்பி கொடுத்து காரை திருப்பாமல் இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து அஷ்வின் பலமுறை கேட்டும் சிரஞ்சீவி பணத்தை திருப்பி செலுத்ததாமல் இருந்த நிலையில், அஷ்வின் நெல்லையில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார்.

சஞ்சீவி நேற்றுமுன் மருதமலை சாலையில் சென்றபோது கூலிப்படையினர் சிரஞ்சீவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த சிரஞ்சீவி சுயநினைவில்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவம் குறித்து சிரஞ்சீவியின் தந்தை பாலமுருகன் வடவள்ளி காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சிரஞ்சீவியின் நண்பர் அஷ்வின் கூலிபடையை ஏவி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அஷ்வின் மற்றும் நெல்லையை சேர்ந்த கண்ணன், முத்தையா, ஆனந்த்பாபு ஆகிய 4 பேரை கைது செய்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...