என்.டி.சி நூற்பாலைகளைத் திறக்க வேண்டும்..! - தொழிற்சங்கங்கள் கோரிக்கை

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளையும் நவீனமயமாக்கி உற்பத்தியை தொடங்கினால் லாபகரமாக இயக்க முடியும். இதுகுறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர். செயலர், என்டிசி தலைமை அலுவலக அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தொழிற்சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.


கடந்த 1974-ம் ஆண்டு தேசிய பஞ்சாலைகழகம்(என்டிசி) அமைக்கப்பட்டு 123 மில்கள் இணைக்கப்பட்டன. லாப நோக்கமற்றதாகவும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை மட்டுமே முக்கிய நோக்கமாக செயல்பட துவங்கியது.

123 நாற்பாலைகளில் தமிழகத்தில் 15 நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. நாடு முழுவதும் ரயில்வே, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளுக்கு ஆடைகள் வினியோகம் செய்யும் பணிவாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் படிப்படியாக 100 நூற்பாலைகள் மூடப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக 23 நுாற்பாலைகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்பட்டு வந்தன.

கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட நுாற்பாலைகளில் இன்று வரை உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் என்டிசி மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய தொழிலாளர் சம்மேளனம்(எச்எம்எஸ்) மாநில செயலாளர் ராஜாமணி கூறுகையில்,

பஞ்சு விலையில் காணப்பட்ட நிலையற்ற தன்மையால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை நிலையாக உள்ளதால் நூற்பாலைகள் நெருக்கடியில் இருந்து மீண்டு வர தொடங்கியுள்ளன.

சந்தை வாய்ப்பு சிறப்பாக உள்ள நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது. கோவையில் ரங்கவிலாஸ், கமுதக்குடியில் பயனீர் யூனிட்1, காளையார் கோயில் பகுதியில் அமைந்துள்ள முருகன் நூற்பாலை உள்ளிட்டவை நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

நிலங்கள் மாநில அரசுகளுக்கு விற்பனை செய்தது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் என்டிசி நூற்பாலை நிர்வாகத்துக்கு வர வேண்டிய ரூ.2,000 கோடி நிலுவை தொகை அடுத்த மாதம் ஏப்ரல் முதல் வரத்தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளையும் நவீனமயமாக்கி உற்பத்தியை தொடங்கினால் அனைத்தையும் லாபகரமாக இயக்க முடியும். இதுவரை மத்திய ஜவுளித்துறை அமைச்சரை இரண்டு முறையும், ஜவுளித்துறை செயலர், என்டிசி தலைமை அலுவலக அதிகாரிகள் என தொடர்ந்து பலரை சந்தித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இருப்பினும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வேதனைக்குரியது. தொழிலாளர்கள் நலன் காக்க எங்கள் முயற்சிகள் தொடரும், என்றார்.

‘எஐடியுசி’ தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் தங்கவேல் கூறுகையில்,

அனைத்து என்டிசி நூற்பாலைகளையும் லாபகரமானதாக இயக்க தற்போது உகந்த சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் மட்டும் 4,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்தபோதும் நடவடிக்கை எடுக்காதது மத்திய அரசின் அலட்சிய போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

என்டிசி நூற்பாலைகள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. தனியார் நூற்பாலைகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய என்டிசி நூற்பாலைகளில் 2020-ம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது, என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...