பொள்ளாச்சி அருகே கோவிலை அப்புறப்படுத்தும் நோட்டீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

பொள்ளாச்சி அண்ணா நகர் அருகேயுள்ள கருப்பராயன் கன்னிமார் கோவிலை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகாலமாக கோவிலில் அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை அப்புறப்படுத்த கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கருப்பராயன் கன்னிமார் கோயில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது கோவிலுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கோவில் அருகேயுள்ள தனியார் லே-அவுட் உரிமையாளர் வழித்தடம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டு கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கோவிலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...