பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் மேன்மை தமிழ் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்ற அருள்மிகு கூப்பிடு‌ பிள்ளையார் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலானது, 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு நன்னீராட்டு பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் வீரமாத்தி அம்மன் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தக்குடம், மற்றும் முளைப்பாரி எடுத்து முற்கால வேள்வி வழிபாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாம் கால வேள்வி பூஜைகள் செய்யப்பட்டு எண் வகை மருந்து சாத்தி விமான கலசங்கள் நிறுவப்பட்டன.



இந்நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், தொடர்ந்து நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடும், பேரூர் ‌ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் தமிழ் மந்திரங்கள் ஓதி கருவரை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மூல மூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.



காரணம்பேட்டை, கோடங்கிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...