உடுமலையில் தனியார் அறக்கட்டளை சார்பில் 2 நாள் இலவச நீட் பயிற்சி!

உடுமலையில் ‌லெப்டினெட் சுபாஷ், ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் நீட் மற்றும் ராணுவ தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் லெப்டினெட் சுபாஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு இவர் முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர், அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பலரையும் ராணுவத்தில் சேர்த்து பணியாற்ற ஊக்கப்படுத்தி வந்ததோடு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.



இந்த நிலையில் தனது மகனின் நினைவாக தந்தை கே.ஆர் செல்வராஜ் நூலகம், வகுப்பறை என பல்வேறு வசதிகளோடு அனுபவமிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், சமூக செயல்பாட்டாளர்கள் என சமூக அக்கறை கொண்டவர்களின் ஆலோசனைகளோடும் தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள், காவல்துறை மற்றும் ராணுவத்தில் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்.



மேலும் பள்ளி மாணவர்களின் ஆளுமை வளர்க்கும் வகையில் ஓவியம், சிலம்பம், பேச்சுத்திறமை, யோகா பயிற்சி மற்றும் கணிதம், அறிவியல் என பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.



தற்போது மருத்துவம் பயில ஆர்வமும், ஆற்றலும் இருந்தும் நீட் தேர்வை எழுத முன் பயிற்சி பெற இயலாத மாணவ -மாணவிகள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

உடுமலை பகுதியிலிருந்து பல மருத்துவ மாணவர்களை உருவாக்கிய அனுபவமிக்க ஆசிரியர்கள், மிக தரமான பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாண-மாணவிகள் பயிற்சி பெற முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாண-மாணவிகள் பயிற்சி பெற விரும்பினால், பயிற்சி கட்டணத்தை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும். மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...