தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயலில் உள்ளதா? - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு!

கோவையில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காததை கண்டித்து, கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் செயலில் உள்ளதா எனக்கேட்டு முதியவர் நூதன முறையில் மனு அளித்துள்ளார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசிங்கம் (74). இவர், தான் குடியிருக்கும் 44 வது வார்டு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதாள சாக்கடை திட்டத்தின் மதிப்பீடு, எத்தனை நபர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜசிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.



ஆனால் இதுகுறித்து எவ்வித முறையான பதிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து இதுவரை வராததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் தன் தலையை பாதி மொட்டை அடித்து கொண்டும், கருப்பு துணியை கண்ணில் கட்டியும், அவரது கேள்வியை கழுத்தில் தொங்கவிட்டவாறும் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். முதியவரின் இந்த நூதன எதிர்ப்பு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுகுறித்து முதியவர் ராஜசிங்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டில் உள்ளதா? மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அனுப்புவதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏன் இவ்வளவு தாமதம்?. தனது மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...