கோத்தகிரியில் கால்நடைகளுக்கான ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை - படுகர் இனமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

கோத்தகிரி அருகேயுள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட பல்வேறு படுகர் இன மக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி, உப்பு ஹட்டுவ பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.


நீலகிரி: கோத்தகிரியில் கால்நடைகள் நோயின்றி வாழ வேண்டி படுகர் இன மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படுகர் கிராம மக்கள் உப்பு ஹட்டுவ பண்டிகையை இன்று சிறப்பாக கொண்டாடினர்.



அதையொட்டி, காலையில் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை தண்ணீரில் கரைத்தனர்.



பின்னர் அந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து சென்று மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.



இதையடுத்து, அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.

இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். மேலும், உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடும் என்பது இந்த மக்களின் நம்பிக்கையாகும்.

பின்னர், வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு படுகர் இன மக்கள் வழங்கி மகிழ்ந்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...