கோவை மாவூத்தம்பதி அருகே தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டுயானை - விவசாயி வேதனை!

கோவை மாவூத்தம்பதி அருகேயுள்ள முருகன்பதி கிராமத்தில் விவசாயி சதீஸ்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த 11 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய நிலையில், வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: மாவூத்தம்பதி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட முருகன்பதி கிராமத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலத்தில் அடிக்கடி வன விலங்குகள் வருவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில், அவர் பேட்டரி பென்சிங் வேலியும் அமைத்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை மரத்தை முறித்து பென்சிங் கம்பிமீது போட்டு உள்ளே புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்திச் சென்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவும் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை, பழைய பாணியிலேயே மரத்தை முறித்து பென்சிங் வேலி மீது போட்டுள்ளது.



மேலும், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 11 தென்னங் கன்றுகளை பிடுங்கி எறிந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி நீண்ட நேரம் சத்தமிட்டு, அந்தக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்த தென்னங்கன்றுகளை காட்டுயானை சேதப்படுத்திய நிலையில், வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயி சதீஸ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...