பல்லடத்தில் ரூ.50 கோடியை மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!

பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மில்லில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி சுமார் 15 மேற்பட்டோரிடம் ரூ.50கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே ரூ.50 கோடி மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நூல் மில்லில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரின் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில் சிவகுமாருக்கு துணையாக இருந்த விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் பெற்று தர வேண்டும் என்றும், பல்லடம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சிவக்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், இன்று வரை சிவக்குமாரை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடுமலை சாலையில் உள்ள சிவக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



20க்கும் மேற்பட்டோர் போலீசாரின் துணையோடு விஜயகுமார் என்பவரின் வீட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



அப்போது, தங்களது சொத்துக்களை இழந்து கடந்த மூன்று வருடங்களாக அலைந்து வருவதாகவும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எங்களது சொத்துக்களை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

சிவக்குமாரின் கூட்டாளிகளை நம்பி ஏமாந்ததால் தற்போது வீடு ஏலத்திற்கு வந்து ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...