திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் - கோவை அரசு மருத்துவமனையில் தொடக்கம்!

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.


கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு அதிநவீன பாலின வழிகாட்டுதல் வழங்கும் நோக்கில் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர். பி.பி. ரமணன், "திருநங்கைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள மிகச் சிறப்பான முயற்சி. இந்த கிளினிக்கில், திருநங்கைகளுக்குத் தேவையான மனநல ஆலோசனை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் பாலின மாற்று சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில், திருநங்கைகள் சங்கத் தலைவர் உட்பட 50க்கும மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் சிம்ப்ளிசிட்டியுடன் பேசிய டாக்டர்.நிர்மலா, "மூன்றாம் பாலின சமூகத்தினருக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குவதற்கான ஒரு முயற்சி இது என்றார். மேலும், இங்கு தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும். முதல் கட்டமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

வாரத்தின் பிற நாட்களில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த கிளினிக்கில் 5 முதல் 6 சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். வரும் நாட்களில் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, சரியான வழிகாட்டுதலுடன் அறுவை சிகிச்சை முறைகள் திட்டமிடப்படும்.

தேவைகளை நாங்கள் ஆராய்ந்த பிறகு அறுவை சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படும், இல்லையென்றால் மாற்று வழிகள் முன்னெடுக்கப்படும். இது ஒரு நீண்ட கால செயல்பாடு என்பதால், தற்போதைக்கு வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் மையமாக இது இருக்கும், என்றார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...