ஊதிய உயர்வு கோரி திருப்பூரில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எட்டப்படாததால், திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் எவர் சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாத்திர உற்பத்தியை நம்பி 10,000-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். பாத்திர தொழிலாளர்கள் அதிக அளவில் உடல் உழைப்பை செலுத்தும் நிலையில் இவர்களுக்கான ஊதிய உயர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் உள்ளது.



இதனை அடுத்து பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 60% முதல் 70% வரை ஊதிய உயர்வும், அதே போல எவர் சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதிய உயர்வும் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.



தொடர்ந்து வருவாய் துறை தொழிலாளர் நலத்துறை மற்றும் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 10 சதவிகித ஊதிய உயர்வும், பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 15% ஊதிய உயர்வும் மட்டுமே கொடுக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் ஊதிய உயர்வை சரியான முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாத்திர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பர்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...