உடுமலை அருகே அரசுப்பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அருகே அரசுப் பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.

முதுகலை ஆங்கில ஆசிரியர் சந்திரன் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்பில்பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மஞ்சள் பைக்கு நாம் மாற வேண்டியது அவசியம் குறித்தும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.



மேலும், மஞ்சள் பை விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, ஸ்லோகம் எழுதும் போட்டிமற்றும் நாடகங்கள் நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...