கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.110.90 கோடி மதிப்பில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு செய்தார்.


கோவை: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.110.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இதில் 250 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும், மழை பெய்யும் போது மருத்துவமனை நுழைவாயிலில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவக்கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...