கோவையில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டி - பாராட்டு சான்றிதழ் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் அரசி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இவ்விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப்போட்டி கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பரிசுகளையும், சிறந்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு பரிசுக் கோப்பைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தரச்சான்றிதழ் உள்ளது. அந்த தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? குறித்து விழிப்புணர்வுடன் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...