மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் - ரூ.1.54 கோடிக்கு பருத்தி விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.54,61,346க்கு பருத்தி விற்பனையானது. பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8128ம், குறைந்தபட்சவிலையாக ரூ. 6500ம் நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 715 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.



பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் 8128ம் குறைந்தபட்சவிலையாக ரூபாய் 6500ம் சராசரி விலையாக ரூ.7350ம் நிர்ணயிக்கப்பட்டது.



பருத்தியின் மொத்த அளவு 7083 மூட்டைகள் (குவிண்டால் 2177.96). இவற்றை ரூ.1,54,61,346/க் 29 வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் வாங்கினர்.

இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...