கோவை ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் 50 மனுக்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் ரூபாசுப்புலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷிர் அகமது, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சிறப்பு நிதியுதவி, குடிநீர் இணைப்பு, வீட்டுவரிச்சலுகை, இலவச காதுகேட்கும் கருவி, குடும்ப ஓய்வூதியம். உள்ளிட்ட 50 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.



தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் 4 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக ரூ.51,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஒரு நபருக்கு ரூ.28,000 பக்கவாத சிறார் நிவாரண நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.75000 மதிப்பிலான திருமண நிதியுதவி, தனது 3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய ராஜலெட்சுமிக்கும். தனது 2 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய எம்பீட்டர் அமலோற்பவ நாதனுக்கும் தலா ரூ.25,000 வீதம், ரூ.50,000 போர்ப்பரணி ஊக்க மானியம் என மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.2.04 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...