கோவையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்கள் ரூ.87.5 லட்சம் நிதியுதவி

கோவையில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்‌ ரூ.12.50 லட்சம், சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.‌87.5 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் இன்று வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.87.5 லட்சம் நிதியுதவி மாநகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ ஆண்கள்‌ மேல்நிலை பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌ புதிதாக கழிவறைகள்‌ கட்டுவதற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ ரூ. 12.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை நிர்வாக இயக்குனர்‌ கிருஷ்ணன்‌‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம்‌ இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கார்த்திக்‌ செல்வராஜ்‌ உடனிருந்தார்.



இதேபோல், கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ உள்ள எரியூட்டு மையத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ புதிதாக தகன மேடை மற்றும்‌ சடங்கு முன் மண்டபம்‌ கட்டும்‌ பணிகளுக்காக சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்பிடம் சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிர்வாக துணைத்‌ தலைவர்‌ செளந்தரராஜன்‌ இன்று‌ வழங்கினார்‌. இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.



மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ வ.உ.சி. மைதானத்தில்‌ உள்ள சருக்கு விளையாட்டு அரங்கத்தில்‌ புனரமைப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம்‌ வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை கோவை சருக்கு விளையாட்டு கழக செயலாளர்‌ சந்திரசேகர் மற்றும் பொருளாளர்‌ சாந்த நரசிம்மன்‌ ஆகியோர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம் இன்று வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...