பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாரு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய பக்தர்களை கண்டு பார்வையாளர்கள் பிரமிப்பு.


கோவை: பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிவரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 27ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.



அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி கோவிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது.



பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடலில் பக்தர்கள் தங்களது உடலை வருத்தி அலகு குத்தி பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி,போன்ற விதவிதமான அலங்கார வளைவுகளில் அமர்ந்தும், அந்தரத்தில் தொங்கிய படியும், கிரேன் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



திருவள்ளுவர் திடலில் தொடங்கிய இந்த ஊர்வலமானது வெங்கட்ரமணன் வீதி, உடுமலை சாலை கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உறவினர்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அந்தரத்தில் தொங்கிவாரு விதவிதமாக அலகு குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்ததைக் கண்டு பொதுமக்கள் பிரம்மிப்படைந்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...