உடுமலையில் ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு!

உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்வு உடுமலை - தளி சாலையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் அனைவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜமா அத்தே இஸ்லாமி கிளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க நோன்பு துறப்பு உடுமலை - தளி ரோட்டில் உள்ள சன் கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழ் பொறுப்பு ஆசிரியரான வி.எஸ்.முஹம்மது அமீன் கலந்து கொண்டு நோன்பின் சிறப்பு சமய நல்லிணக்கம் பேணுதல் குறித்து பேசினார். தொடர்ந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சமரசம் மாத இதழ் பொறுப்பாசிரியர் முஹம்மது அமீன் புத்தகங்களை பரிசளித்தார்.

சமய நல்லிணக்க நோன்பு சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...