உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் சாலையில் நடுப்பகுதியில் நின்ற காட்டு யானை (கொம்பன்), தந்தம் கொண்டு தாக்கியதில் மூன்று வாகனங்களின் முன்பக்கம் சேதமானது.


திருப்பூர்: உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.



அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.



அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.

இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...