கோவையில் டிபன் கடைக்காரரிடம் ரூ.70 ஆயிரம் திருடிய இளைஞர்!

கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(52). டிபன் கடை உரிமையாளரான இவர், புலியகுளத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்த போது ஏடிஎம் கார்டு சிக்கி கொண்டது. அதை எடுத்து தருவதாக கூறி ரூ.70ஆயிரம் பணத்தை இளைஞர் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஏடிஎம் மையத்தில் சிக்கிய கார்டை எடுத்து தருவதாக கூறி ரூ.70ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(52). டிபன் கடை உரிமையாளரான இவர், புலியகுளத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் 3 கட்டங்களாக ரூ.14 ஆயிரம் எடுத்துள்ளார்.

அப்போது திடீரென அவரது ஏ.டி.எம்., கார்டு இந்திரத்தில் சிக்கி கொண்டது. ஜான் சேவியர் எவ்வளவு முயற்சி செய்து எடுக்க முடியவில்லை. இதனை வெளியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் பார்த்தார்.

பின்னர் அவரே ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து என்னவென்று விசாரித்தபோது, ஜான்சேவியரும் நடந்ததை தெரிவித்தார். உடனே அந்த இளைஞர், தான் உங்களுக்கு உதவுகிறேன் எனவும், அதற்கு நீங்கள் உங்கள் ரகசிய எண்ணை தெரிவித்தால் உங்களின் ஏ.டி.எம். கார்டை எடுத்து தருகிறேன் என்றார்.

அதை நம்பிய ஜான் சேவியரும் கார்டை எடுத்து தருகிறார் என்பதால், அந்த இளைஞரிடம் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். ரகசிய எண்ணை பெற்று கொண்டு இளைஞர் உள்ளே சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்த இளைஞர், கார்டை எடுத்து விட்டதாக கூறி ஜான் சேவியரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

இதனை உண்மை என நினைத்து அந்த கார்டை வாங்கி கொண்டு ஜான் சேவியர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜான் சேவியருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.70 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனே ஜான் சேவியர் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அவர்களும் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். கார்டு தன்னிடம் இருக்கும்போது எப்படி பணம் எடுக்க முடியும் என யோசித்தார். அப்போது தான் அவருக்கு அந்த இளைஞரின் நியாபகம் வந்தது.

தனக்கு உதவுவது போல் நடித்து, தனது ஏ.டி.எம். கார்டை அவர் எடுத்து கொண்டு, வேறொரு கார்டை தன்னிடம் கொடுத்ததும், தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...