காசி தமிழ் சங்கத்திற்கு சென்ற கோவை பெண்ணுக்கு பிரதமர் கடிதம்!

தமிழகத்திலிருந்து காசி தமிழ் சங்கத்திற்கு சென்று வந்த கோவையை சேர்ந்த துளசி அம்மாள் என்ற பெண்ணுக்கு நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது என பாரத பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.



கோவை: காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 16ஆம் தேதி காசியில் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்து சென்றிருந்தனர்.

பின்னர் தமிழ் சங்கம் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அனைவரும் இந்த தமிழ் சங்கம் நடைபெற்றது குறித்த நிகழ்வுகளை கடிதமாக பாரத பிரதமர் மோடிக்கு எழுதி இருந்தனர்.



இந்நிலையில் சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அவர்களும் பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்க நிகழ்வு குறித்து கடிதம் எழுதி இருந்தனர். இதற்கு பதில் அனுப்பும் விதமாக பிரதமர் மோடி, தமிழில் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. ஒவ்வொருவரின் உணர்வாக இருக்கக்கூடியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம். காசி தமிழ் சங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அன்பும், அரவணைப்பும் மதிக்கக் கூடியது. நாட்டின் ஒற்றுமையை ஒன்றிணைப்பது இது போன்ற முயற்சிகள் மூலம் இரட்டிப்பாகும் என கடிதம் எழுதியுள்ளார்.



இந்த கடிதத்தை பெற்ற துளசி அம்மாள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளார்.



பின்னர் இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து பேசிய துளசி அம்மாள், காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றது மகா மன மகிழ்ச்சி தருவதாகவும், காசி தமிழ் சங்கத்திற்கு சென்றபோது அங்குள்ள கோவில்கள், ராமர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று தரிசித்தது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அங்குள்ள மக்கள் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழர்களையும், தமிழரையும் வளர்க்க உதவும். பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த கடிதத்தை அனுப்பி இருந்தோம். அதற்கு பதில் அனுப்பும் விதமாக, பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...