உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கும்படி பயணிகள் வலியுறுத்தல்

உடுமலை வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015இல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.

தற்போது உடுமலை ரயில் நிலையம் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளி தேர்வுகள் முடிவடைய உள்ளன.

கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கோடைக் காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...