தாராபுரத்தில் அரசு பேருந்து ஜப்தி - அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பூர் மாவட்டம் ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு தராததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அரசு பேருந்தை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊத்துப்பாளையம் பன்னாடி தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் கவுண்டர் மகன் தங்கவேல்(45). இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 தேதி தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்து கிழே விழுந்த தங்கவேல் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கவேலின் தந்தை, தாராபுரம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்கவேல் குடும்பத்திற்கு ரூ.7.38லட்சம் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.. மனுவை விசாரித்த நீதிமன்றம் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

தாராபுரம்-பழனி வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து இன்று ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...