உடுமலையில் தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு!

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகம் முன்பு மாணவிகள் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில், உடுமலையில் உள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவியர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் மாணவியர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த சின்னங்கள் அடங்கிய பலகையை வைத்துக்கொண்டு, பள்ளியின் முன்பு வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்று வது, இரண்டு சக்கர வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டுவது குறித்து, வாகன ஓட்டுனர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியை விஜயலட்சுமி ஒருங்கிணைத்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...