கோவையில் காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி பலி - போலீசார் விசாரணை

கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் என்பவர் காட்டு யானை தாக்கி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறை மற்றும் ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது தண்ணீர் பந்தல் அருகே உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைடுத்து, அங்கு ஆய்வு செய்தபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் தனபால் (வயது39) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு அவ்வழியாக வந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடல் கிடந்த 150 மீட்டரில் அடர் வனப்பகுதி என்பதால் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். காட்டுயானை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம்,மத்துவராயபுரம் பகுதிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...